நெல் ஜெயராமன் மறைவு – தமிழகத்துக்குப் பேரிழப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயராமன், அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 169 பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரித்தவர் ஆவார். மரபணு மாற்ற விதைத் திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.

பாராம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சாதனை நாயகர் நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

Leave a Response