இந்தியா ஜனநாயக நாடு தானா..? ; விஜய்சேதுபதி சந்தேகம்..!


மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் கோயில்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், படத்திற்கும், விஜய்க்கும் பல்வேறு தரப்புகளிலும் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. ரஜினி, கமல் முத்தால் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் விஜய்சேதுபதியும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ”பேச்சு சுதந்திரம் இல்லையென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று அழைக்க வேண்டாம். மக்கள் தங்களது குரலை உயர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். பெரிய நடிகர்கள் மட்டுமல்லாமல் இளம் நடிகர்களும் பாஜக மற்றும் மத்திய அரசின் அராஜகப்போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது ஆரோக்கியமான விஷயம் தான்.

Leave a Response