செந்தில்-கவுண்டமணி பாணியில் விஜய்யை சிக்கலில் மாட்டிவிட்ட ரசிகர் மன்ற நிர்வாகி..!


ஒரு படத்தில் காதுகுத்து வீட்டுக்கு சென்றுவிட்டு மாய் எழுதாமல் திரும்ப நினைப்பார் கவுண்டமணி.. ஆனால் கூடவே இருக்கும் செந்தில் “அண்ணன் இப்போது முன்னூறு ரூபாய் மாய் செய்வார்” ஈன கவுண்டரை கோர்த்துவிட்டு சிக்கலில் மாட்டிவிடுவார்.. இதேபோன்ற ஒரு விஷயத்தை செய்து நடிகர் விஜய்யை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த ஜோஸ்பிரபு என்பவர்.. நடந்தது என்ன..?

அரியலூரைச் சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவருக்கு கன்னியாகுமரி விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக இருந்த ஜோஸ்பிரபு கல்விக்கட்டணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால் உறுதியளித்தபடி நிதியுதவி செய்யாததால் படிப்பை தொடர முடியாமல் வீடு திரும்பியுள்ளார் ரங்கீலா. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாணவி ரங்கீலா விஜய் பிறந்தநாளின் போது சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவது போல் எல்லாம் புகைப்படம் எடுத்ததாக கூறினார்

ஆனால் சொன்னது போல கல்வி நிதியுதவி அளிக்காததால் படிப்பு வீணாகி போய்விட்டதாக ரங்கீலா தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கல்வி நிதியுதவி தருவதாக ஏமாற்றிவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது : அரியலூர் மாணவி ரங்கீலாவிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ்பிரபு என்பவர் என்றும் அவர் நீக்கப்பட்டது தெரியாமல் ரங்கீலா அவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டு பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளார் என்றும். ரங்கீலாவிற்கு ஜோஸ்பிரபு அளித்த வாக்குறுதி குறித்து எனக்கோ உள்ளூர் நிர்வாகிகளுக்கோ தெரியாது என்றும் இதுதான் நடந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. .

மேலும் மாணவ சமுதாயத்தின் மீது விஜயும் அவரது ரசிகர்களும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும். மாணவி ரங்கீலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் கல்வியைத் தொடர நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளோம். அந்த நிதியை பெற்று மாணவி தனது கல்வியைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.

Leave a Response