கரப்பான்பூச்சி போராட்டம் வெற்றி – பாஜக பின்னடைவு

இந்த ஆண்டுக்கான,மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான நீட் நுழைவுத் தேர்வு மே 3 ஆம் தேதி நடத்​தப்​பட்​டது.இத்​தேர்​வின் வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.இதையடுத்​து, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறு​தேர்வு நடத்​தப்​பட்​டு,ஜூலை 16 ஆம் தேதி இரவு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. இதற்​கிடையே,வினாத்​தாள் கசிவுக்குக் காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில்,வினாத்​தாள் கசிவு விவ​காரத்​துக்கு பொறுப்​பேற்று ஒன்றிய கல்விஅமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக்கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்​தர்மந்​தரில் போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்​சுக்​கும் இப்​போ​ராட்​டத்​தில் இணைந்து காலவரையற்ற உண்​ணா​விரதத்தைத் தொடங்​கி​னார்.தொடர் உண்​ணா​விரதம் காரண​மாக உடல்​நிலை
மோசமடைந்​த​தால்,அவரை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர்,18 ஆம் தேதி மருத்​து​வ​மனை​யில்
அனு​ம​தித்​தனர்.

அதைத்தொடர்ந்​து,சிஜேபி தலை​வர் அபிஜித் திப்கே உள்​ளிட்​டோர் ஜந்​தர்மந்​தரில் தொடர் உண்​ணா​விரதத்தைத் தொடங்​கினர்.ஜூலை 20 ஆம் தேதி சிஜேபி சார்​பில் நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்​தப்​பட்​டது.
அப்​போது,போராட்​டக்​காரர்​களைக் கலைக்க தடியடி நடத்​தி,கண்​ணீர் புகைக் குண்​டு​களை வீசினர்.இதில் 100 க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதனால்,தில்​லியைத் தொடர்ந்​து, சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, லக்​னோ, பெங்​களூரு, சண்​டிகர், சூரத்,
பாட்​னா,ஐத​ரா​பாத் எனப் பல்​வேறு நகரங்​களி​லும் மாணவர் அமைப்​பினர், இளைஞர்​கள் போராட்​டங்​களைத்
தொடங்​கினர்.

இந்தச்சூழலில்,ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவில், சமூக வலை​தளத்​தில் ஒரு காணொலி வெளி​யிட்​டார் பிரதமர் மோடி.அதில்,வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும்.
நாடாளு​மன்​றத்​தில் புதியமசோதா நிறைவேற்​றப்​படும் என்று உறுதி அளித்​தார்.

அதைத் தொடர்ந்து,ஒன்றிய அமைச்​சர்​கள் ஜிதேந்​திரசிங்,ஜே.பி.நட்டா ஆகியோரை சிஜேபி நிர்​வாகி​கள் நேற்று முன்​தினம் சந்​தித்​தனர்.அப்​போது,நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​துக்கு தார்​மீகப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்​டும் என்பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை அவர்​கள் வலி​யுறுத்​தினர். இவற்றை பரிசீலிப்​ப​தாக அரசு தரப்​பில் உறுதி அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில்,ஒன்றிய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்,தற்​போதைய சூழ்​நிலையை தேச​விரோத சக்​தி​கள் தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக்கூடாது.நமது இளைஞர்கள் தீயசுழலில் சிக்​கிக்கொள்​ளக்கூடாது என்​ப​தற்​காக பதவியை ராஜி​னாமா செய்​கிறேன் என்று விளக்​கம் அளித்​துள்​ளார்.

அதைத் தொடர்ந்​து,தில்​லி​யில் ஒன்றிய அமைச்​சர்​கள் நட்​டா, ஜிதேந்​திர சிங்கை சிஜேபி செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்​தித்து 3 ஆவது சுற்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.அப்​போது,அவர்​களது அனைத்துக் கோரிக்​கைகளை​யும் ஒன்றிய அரசு ஏற்​றுக்கொண்​டது.பின்​னர்,அனை​வரும் கூட்​டாகச்
செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தனர்.

அப்போது,சிஜேபி செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்​கா ஆகியோர் கூறியதாவது….

கடந்தசில நாட்​களாக மத்​தியஅரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம்.நீட் வினாத்​தாள் கசிவுக்​குப்
பொறுப்​பேற்று மத்​திய கல்விஅமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்​டும் என்று வலி​யுறுத்​தினோம். இதன்​படி அவர் பதவி விலகியுள்​ளார்.
போ​ராட்​டத்​தில் பங்​கேற்ற இளைஞர்​கள் மீதான வழக்​கு​களைத் திருமப்பெற வேண்​டும்.நீட் வினாத்​தாள் கசி​வால் தற்​கொலை செய்து கொண்ட மாணவ,மாணவி​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.1 கோடி இழப்​பீடு
வழங்கவேண்​டும் என்ற எங்​களது கோரிக்​கைகளை​யும் மத்​திய அரசு ஏற்​றுக்​கொண்டுள்​ளது.டெல்லி மட்​டுமன்றி பாஜக மற்​றும் அதன் கூட்​ட​ணிக்கட்​சிகள் ஆளும் மாநிலங்​களி​லும் போராட்​டக்​காரர்​கள் மீதான வழக்​கு​கள் திரும்பப்பெறப்​படும்.எதிர்​காலத்​தில் சிஜேபி நிர்​வாகி​கள் மீது எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டாது என்​றும்
மத்​திய அரசு உறுதி அளித்​துள்​ளது.
குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் எங்​களது கோரிக்​கைகளை நிறைவேற்ற மத்​திய அரசு ஒப்​புக்​கொண்டுள்​ளது. எனவே,போராட்​டத்தை முழு​மை​யாகத் திரும்பப்பெறுகிறோம்.அனைத்து இளைஞர்​களும் வீடு திரும்​பு​மாறு
அறி​வுறுத்​துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒன்றிய அமைச்​சர் ஜே.பி.நட்​டா கூறியதாவது….

போராட்​டக்​காரர்​கள் மீதான அனைத்து வழக்​கு​களும் திரும்பப்பெறப்​படும்.யார் மீதும் எந்த நடவடிக்​கை​யும்
எடுக்​கப்​ப​டாது.நீட் வினாத்​தாள் கசி​வால் தற்​கொலை செய்​து​கொண்ட மாணவ,மாணவி​களின் குடும்​பங்​களுக்​கு, மனி​தாபி​மான அடிப்​படை​யில் சட்டவிதி​களுக்கு உட்​பட்டு இழப்​பீடு வழங்​கப்​படும்.
போட்​டித் தேர்​வு,நுழைவுத் தேர்வு சீர்​திருத்​தங்​கள் தொடர்​பாக 5 அம்​சக் கோரிக்​கைகளை சிஜேபி
முன்​வைத்​துள்​ளது.இவற்றை பரிசீலித்து முடிவு எடுப்​போம்.போ​ராட்​டத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கவேண்​டும்​ என மத்​தி​ய அரசு தெரி​வித்​ததை ஏற்​று போ​ராட்​டத்​தை சிஜேபி திரும்பப்​ பெற்​றுள்​ளது.

இவ்​வாறு அவர்​ கூறினார்​.

கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டத்தின் விளைவாக பாஜக அமைச்சர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response