நடுத்தட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்த இராகுல் – மக்கள் வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது…

வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.க ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.

வருமானம் அப்படியே உள்ளது. ஆனால் வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது.பயங்கர பணவீக்கத்தின் இந்தக் காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜிஎஸ்டி செலுத்திப் பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்புப் பலன் கிடைக்கிறதா? இல்லை என்பது சரிதானே? அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த அளவு கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?. உங்களைப் பயமுறுத்தி, உங்களிடம் அரசின் விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

இது வரி பயங்கரவாதத்தின் சக்கரவியூகம்.பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தைக் காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார்.இந்த பயங்கரவாதம் மற்றும் அநீதிக்கு எதிராக அனைத்துக் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையான இந்தியர்களுடன் நான் நிற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மிகச் சிறிய வருமானத்துக்கும் வரி கட்டியாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு அதனால் பேரரதிர்ச்சி அடைந்துள்ள நடுத்தட்டு மக்களின் எண்ணத்தைச் சரியாக வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்திக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு கிடைத்து வருகிறது.

அதேநேரம், நீங்கள் ஆட்சிக்கு வரும்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் இராகுல் காந்தியிடம் மக்கள் வைத்துள்ளனர்.

Leave a Response