உருத்தெரியாத மனிதனின் கதைதான் ‘உரு’..!


தமிழ்சினிமாவில் படம் ஏறுபவர்கள் தமிழில் தான் படத்திற்கு தலைப்பு வைக்கவேண்டும் என சொன்னாலும் சொன்னார்கள்.. இயக்குனர்கள் எல்லோரும் தூய தமிழில் வார்த்தைகளாக தேடித்தேடி தங்களது படங்களுக்கு டைட்டில் வைத்து வருகிறார்கள்.. அந்தவகையில் கலையரசன் தன்ஷிகா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் தான் ‘உரு’..

இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்கி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சொல்லப்போனால் உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய படம் தான் இது. இந்தப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப்படம் முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி என இப்படத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் என எல்லோரும் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளனராம்.

Leave a Response