ஜூலை 7 இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா?

பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொண்டே போகும் நிலை தற்போது இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இதனால் மக்கள் பெருங்கவலை அடைந்துள்ளனர்.

அரசுகளும் எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் இந்த அநியாயத்தைக் கேட்க ஆளேயில்லையா? என்று அங்கலாய்க்கின்றனர்.

Leave a Response