வடபழனி முருகன் கோயில் தக்காராக நீடிக்கும் தினமலர் பதிப்பாளர் – நடந்தது என்ன?

சென்னை வடபழனி முருகன் கோயில் தக்காராக, ‘தினமலர்’ நாளிதழின், வர்த்தகப்பிரிவு இயக்குநரும், கோவை பதிப்பு வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டார்.

வடபழனி முருகன் கோயில், அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் அலுவல் சார் தக்காரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அலுவல் சார் தக்காராக, கோவில் துணை ஆணையரே செயல்பட்டு வந்தார்.

கோவிலின் நிர்வாக நலன் கருதி, அலுவல் சாரா தக்காராக, ‘தினமலர்’ நாளிதழின் வர்த்தகப் பிரிவு இயக்குநரும், கோவை பதிப்பின் வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டதாகச் சொல்லி.இதற்கான உத்தரவை, அவரிடம், தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இது நடந்தது 2019 சனவரி 29 ஆம் நாள்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே வலுக்கட்டாயமான விமர்சனங்களை வைத்து வருகிறது தினமலர் நாளேடு.அதற்குக் காரணம், தக்கார் பொறுப்பிலிருந்து ஆதிமூலத்தை நீக்கிவிடுவார்கள் என்கிற பேச்சு அடிபட்டதுதான் என்கிறார்கள்.

அதனால், அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு, அந்நாளேட்டினரைத் தொடர்பு கொண்டு, உங்கள் பதிப்பாளரே வடபழனி முருகன் கோவில் தக்காராகவே நீடிப்பார் என்று வாய்மொழியாக உறுதி கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தச் சமரசச் செய்தியறிந்தவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Leave a Response