கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள கந்தலா சமூக சுகாதார மையத்திற்கு சில பெண்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக ரேபிஸ் (நாய்க்கடி) எதிர்ப்பு ஊசி போடப்பட்டது.இத்னால் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரிப்பது ஏன்? என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ், நேரடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

1. கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க் கடி ஊசி போடப்பட்டது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
2. தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எப்படி மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது?
3. குறைவாக பரிசோதனை செய்யப்படுவது ஏன்? அறிக்கையை தாமதப்படுத்துவது ஏன்?
4. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஏன்?

இவ்வாறு 4 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Leave a Response