ஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்

மே 29,வெள்ளிகிழமையன்று ஜெயமோகன் தனது பிளாக் ஸ்பாட்டில் “ ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்றொரு பதிவிட்டுள்ளார். அதன் கீழ் ’ மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர், புதிய கலாச்சாரம் இதழ் ஆசிரியர் போன்ற பொறுப்புகளிலிருந்தும், இவைகளை இயக்கிடும் அரசியல் அமைப்பிலிருந்தும் 24- 02- 2020 ல் விலகிய மருதையன் ’ பேசுவது போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் கீழ் ’மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் குரல்’ என தலைப்பிட்டு , அன்புள்ள ஜே என்று ஆரம்பமாகிறது. ’என் பெயர் வேண்டாம்’ என்று கடிதம் எழுதியவர் கேட்டுக்கொள்கிறார்.

அந்தக் கடிதத்தில்…

நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிகாரப்பதவிகளில் இருந்த பா.செயப்பிரகாசம் போன்ற சாதிவெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெரியாததா நம்மூர்உளவுத்துறை? இந்த தலைமையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன் விவரம்….

எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான
ஜெயமோகனின் அவதூறுக்கு-

அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.

*

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.

சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள்.

பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :

1.எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்
2.பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
3.தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
4.இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,

5.ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.
6.ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
7.சு.ராமச்சந்திரன், மாநிலப் பொருளாளர், த.மு.எ.க.ச.

8.சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,
9.இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்
10.ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்
11.எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,

12.பேராசிரியர் வீ.அரசு
13.மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
14.பொதியவெற்பன், எழுத்தாளர்,
15.கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,
16.செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்
17.பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்

18.பேராசிரியர் சரஸ்வதி
19.பேராசிசிரியர் கல்விமணி, சமூகச்செயற்பாட்டாளர்
20.பேராசிரியர் சிவகுமார்
21.பேராசிரியர் கோச்சடை
22.பேராசிரியர் க. பஞ்சாங்கம்
23.தோழர் பிரேம், கவிஞர், எழுத்தாளர்
24.பேராசிரியர் பா. மதிவாணன்
25.பேராசிரியர் அரச முருகுபாண்டியன்
26.பேராசிரியர் சு.மாதவன்
27.பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்

28.யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்
29.கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்
30.சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்
31.மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,
32.பிரளயன், நாடகவியலாளர்
33.பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்
34.பெருமாள் முருகன், எழுத்தாளர்
35.நா. விச்வநாதன், எழுத்தாளர்
36.ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்
37.பசு. கவுதமன், எழுத்தாளர்
38.அமரந்தா, எழுத்தாளர்

39.சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு
40.களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,
41.வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,
42.க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,
43.இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,

44.கவிஞர் அறிவுமதி
45.மயிலை பாலு, ஊடகவியலாளர்
46.பி.என்.எஸ். பாண்டியன், ஊடகவியலாளர்
47.மகேஷ், ஊடகவியலாளர்
48.மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,
49.புதுவைத் தமிழ்ச் சங்கம்.
50.அழகியபெரியவன், எழுத்தாளர்
51.அன்பாதவன், எழுத்தாளர்

52.எஸ்.வி.வேணுகோபால், சமூகச் செயற்பாட்டாளர்,
52.பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்
53.வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,
54.கவிஞர் மாலதிமைத்ரி
55.கவிஞர் சுகிர்தராணி,
56.கவின்மலர், எழுத்தாளர்
57.திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்
58.ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்
59.நவீனா, எழுத்தாளர்

60.ஜமாலன், எழுத்தாளர்
61.புஷ்பராணி, எழுத்தாளர்
62.இரா. முருகவேள், எழுத்தாளர்,
63.லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்
64.அப்பணசாமி, எழுத்தாளர்
65.இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்
66.பாட்டாளி, எழுத்தாளர்
67.சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து

68.முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
69.சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,
70.குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,
71.ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே
72.கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
73.கார்வண்ணன், எழுத்தாளர், பாரீஸ், பிரான்ஸ்,
74.ச. மிக்கேல்தாஸ்,
75.தென்மோடிக் கூத்துக் கலைஞர்,கனடா,
76.ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,

77.கவிஞர்.இரா.தெ. முத்து, எழுத்தாளர்
78.நாறும்பூநாதன், எழுத்தாளர்
79.மணிமாறன், எழுத்தாளர்
80.செங்கதிர், ஆசிரியர், மானுடம் வெல்லும்
81.மு.பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் உலகம்,
82.நீலகண்டன், கருப்புப் பிரதிகள்

83.பாரதிநாதன், எழுத்தாளர்
84.புலியூர் முருகேசன், எழுத்தாளர்
85.தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்
86.சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
87.மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை
88.எஸ். கே. கங்கா, எழுத்தாளர்
89.க டங்கநேரியான், கவிஞர்
90.சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
91.எச். பீர்முகம்மது, எழுத்தாளர்
92.வி. உ. இளவேனில், கவிஞர்
93.ஏர் மகராசன், எழுத்தாளர்

94.கருப்பு கருணா, எழுத்தாளர்,
95.கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,
96.சுந்தர், பதிப்பாளர்
97.லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்
98.அண்டனூர் சுரா, எழுத்தாளர்
99.மு.சிவகுருநாதன், கல்வியாளர்,
100.அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
101.களப்பிரன்கவிஞர்
102.துவாரகா சாமிநாதன், கவிஞர்

103.முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்
104.துரை குணா, எழுத்தாளர்
105.குமரன்தாஸ், எழுத்தாளர்
106.புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்
107.கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்
108.வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.
109.கவிஞர் நந்தலாலா
110.திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்

Leave a Response