நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு

கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் வெகுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு என்று தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் கபசுரக் குடிநீர் அருந்துவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் காய்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

அக்கட்சியைச் சேர்ந்த அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் இயங்கும் குழுவினர் கடந்த ஒரு வாரமாக தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களில் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

பணியில் இருக்கும் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியினரின் இச்செயலைப் பாராட்டுகின்றனர். இதைப்பார்த்த திமுக அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் இப்பணியில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response