மத்திய அமைச்சர் மறைவு – கர்நாடக பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

கடந்த 2 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59.

புற்று நோய் பாதிப்பால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்னர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக காலை 8 மணி வரை லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார்.

1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்தகுமார் மறைந்ததால் மிகவும் துயருற்றேன். மிகச்சிறந்த தலைவர் அவர். இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர். தனது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார்.
அனந்தகுமார் மிகச்சிறந்த நிர்வாகி, அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாகக் கையாண்டுள்ள அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார்.

கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் அனந்தகுமார். தனது தொகுதியினர் எப்போது அணுக கூடியவராக அனந்தகுமார் இருந்து வந்தார்.

அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த பாஜகவுக்கு இவருடைய மறைவு மேலும் பின்னடைவு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response