அதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீர் கைது

சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்துள்ளனர். சென்னையில் நடிகர் மன்சூர் அலிகானை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

திட்ட விவரம்:

சேலம் – சென்னை இடையே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 277 கிலோமீட்டர் தூரத்துக்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

சேலத்தில் 36 புள்ளி 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள இந்த சாலைக்கு 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகான் கைது. சென்னை சூளைமேடு வீட்டில் வைத்து சேலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் தீவெட்டிப்பட்டு காவல் துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response