
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று (ஏப்ரல் 22 )காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இனப்படுகொலைகளுக்குப் பதில் சொல்லும் காலம் தொடங்கிவிட்டது, அடுத்து ராஜபக்சேவும் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
