ஜவுளி சாயக் கழிவுகளிலிருந்து உருவாகும் நுண்ணுயிர் கழிவுகளை, எரிபொருளாகவோ, விவசாயத்திற்கு உரமாகவோ பயன்படுத்த அனுமதி கேட்டு, திருப்பூர் எம்பி சத்தியபாமா இன்று, சுற்றுச்சூழற் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைச் சந்தித்தார்.
அமைச்சரிடம் அவர் அளித்துள்ள கடிதத்தில்,
30வருடங்களுக்கு முன்பு ஐவுளி சாயக் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் திடக்கழிவுகள் அனைத்தும் நச்சுத்தன்மை உடையவை என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய குறிப்பில் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் தற்போதுள்ள மாதிரி சிறந்த தொழில்நுட்பம் இல்லை.
தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, தற்போது பூஜ்ய நிலை சுத்திகரிப்பு [ZERO LIQUID DISCHARGE] முறையில் சாய கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழர்ச்சி முறையில் [RECYCLING METHOD] 99% நல்ல தண்ணீரையும், உப்பையும், உப்பையும் பிரித்தெடுத்து மறு உபயோகம் செய்யப்படுகிறது.
மீதமுள்ள 1% திடக்கழிவுகள் மூன்று வகைப்படும்.
1)ரசாயன கழிவு[Chemical Sludge]
1)நுண்ணுயிர் கழிவு [Bio Sludge]
3)கலப்பு உப்பு [Mixed Salt]
*முதல் வகை ரசாயனக்கழிவு – சிமெண்ட் ஆலைகளில் மூலப்பொருளாகவும்,
*மூன்றாவது வகை கழிவான கலப்பு உப்பு – மறு உபயோகத்திற்காக ஆய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்,
*இன்னொரு வகை திடக்கழிவான நுண்ணியிர் கழிவில் – ரசாயனங்களோ அல்லது கேடு விளைவிக்கும் எந்த பொருட்களுமோ இல்லை என ஈரோட்டில் உள்ள ஏவ் கேர் என்ற ஆராய்ச்சி நிறுவன சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த நுண்ணுயிர் கழிவானது, விவசாயத்திற்கு இடுபொருளாகவும், எரிசக்தி திறன் அதிகம் இருப்பதால், நீராவி உலைகளில் விறகிற்குப் பதில் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் அளித்துள்ள சான்றையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆகவே இதை எரிபொருளாகவோ, விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தினாலோ, ‘WEALTH OUT OF WASTE’ என்ற அடிப்படையில் செலவு செய்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, அதை உபயோகித்து வருமானம் ஈட்டினால் சுத்திகரிப்பு செலவு குறைந்து, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு [ZLD] திட்டத்திற்கு பேரிதவியாக இருக்கும்.
ஏற்கனவே, இது குறித்து உரிய சான்றுகளுடன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருப்பதாகவும், ஆகவே, இந்த நுண்ணியிர்கழிவை, விவசாயத்திற்கோ, அல்லது எரிபொருளாகவோ பயன்படுத்தி, பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை மேம்படுத்த அனுமதி அளிக்குமாறு,
அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சத்தியபாமா எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.