
‘புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் திரைப்படம் ’அடங்காதே’. இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக சுரபி நடிக்கிறார்.சண்முகம் முத்துசாமி என்ற புதுமுகம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் திருச்சியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீத அளவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே புத்தாண்டை முன்னிட்டு ’அடங்காதே’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள புரூஸ் லி படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. எனவே இந்த சூழலில் அடங்காதே படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டால் படத்திற்கு மக்களிடையே நல்ல அறிமுகம் கிடைக்கும் என ஜி.வி.பிரகாஷ் குமார் நினைக்கிறாராம்.


