செந்தில்பாலாஜி வழக்கில் நடப்பதென்ன? – விவரம்

திமுக ஆட்​சி​யில் டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்
குற்​றச்​சாட்​டு​கள் சொல்லப்படுகின்றன.அதனடிப்​படை​யில்,முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி,டாஸ்​மாக்
முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.​வி​சாகன்,டாஸ்​மாக் முன்​னாள் மண்டல முது​நிலை மேலா​ளர்​கள் டி.​ராமதுரை முரு​கன்,ஆர்​.பன்​னீர்​செல்​வம்,செந்​தில் பாலாஜி​யின் முன்​னாள் நேர்​முக உதவி​யாளர் பாஸ்​கர்,செந்​தில் பாலாஜியின் நண்​பர்​கள் ரத்​தேஷ் ராஜ்,மூலனூர் கார்த்​திக் ஆகிய 7 பேர் மீது ஜூலை 28 ஆம் தேதி புதியவழக்​கு பதிவு செய்​யப்பட்டுள்ளது.

இந்தவழக்​கில் முன்​பிணை கோரி செந்​தில்பாலாஜி சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.அப்​போது செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்தவழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ,கடந்த ஆட்​சி​யில் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத்துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில்,விசா​ரணை நடத்த உச்சநீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.குதிரை பேர வழக்​கில் உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி செந்​தில் பாலாஜி முறை​யாகத் திரு​வல்​லிக்​கேணி காவல்துறை முன்​பாக ஆஜராகி வரு​கிறார்.வாகன டெண்​டர் மற்​றும் காலி
மது​பாட்​டில்​கள் சேகரிப்​பில் அவருக்கு எந்​தத் தொடர்​பும் இல்​லை.அரசி​யல் ரீதி​யாக பழி​வாங்​கும் நோக்​கில்
இந்த வழக்​கைப் பதிவு செய்​துள்​ளனர்.இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜியைக் கைது செய்ய எந்த அவசி​ய​மும்
இல்​லை.எனவே முன்​ஜாமீன் வழங்கவேண்​டும் என்று வாதிட்​டார்.

அரசு தரப்​பில் ஆஜரான மாநில தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன்,டாஸ்​மாக் நிர்​வாகத்​தில் கடந்த ஆட்​சி​யில் நடந்த ஊழல் மற்​றும் முறை​கேடு​கள் மொத்​த​மாக மறைக்​கப்​பட்​டுள்​ளன.அமலாக்​கத்துறை சோதனை நடத்தி ஊழல் தொடர்​பான முக்​கிய ஆதா​ரங்​களை​யும்,ஆவணங்​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளனர்.இந்த
முறை​கேடு​களுக்​கும்,குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களுக்​கும் உள்ள தொடர்பு குறித்து முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் விசாகன் தெள்​ளத் தெளி​வாக அமலாக்​கத்துறை​யிடம் வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.
மூடப்பட்டதாக கூறிய பார்கள் மூலம் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. போக்​கு​வரத்து டெண்​டரில் ரூ.100 கோடி ஒதுக்​கப்​பட்​டு முறை​கேடு நடந்​துள்​ளது.பழைய மற்​றும் பயன்​படுத்​தப்​பட்ட பாட்​டில்​களை மது​பான ஆலைகளுக்கு வழங்​கிய​தில் ரூ.143 கோடி முறை​கே​டாக கையாளப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாகச் செந்​தில் பாலாஜி​யிடம் விரி​வாக விசா​ரணை நடத்த வேண்​டி​யுள்​ளது.எனவே அவருக்கு முன்​ஜாமீன் வழங்​கக்கூடாது.

இவ்​வாறு வழக்​கறிஞர் ஜான் சத்​யன் வாதிட்​டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி,முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​பட்​டதற்​கு முகாந்​திரம் உள்​ளது.செந்​தில் பாலாஜி மீதான குற்​றச்​சாட்​டு​கள் தீவிர​மானவை. இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜியைப் காவலில் வைத்து விசா​ரிப்​பதும் அவசி​யம்.எனவே,முன்​ஜாமீன் மனு
தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது என்று உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில்,உச்சநீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது.இதை அவசர வழக்​காகக் கருதி விசா​ரணைக்கு எடுக்க வேண்​டுமென உச்சநீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் முன்​னிலை​யில் செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்தவழக்​கறிஞர்​கள் கபில் சிபல் மற்​றும் முகுல் ரோத்​தஹி ஆகியோர்
முறை​யிட்​டனர்.இதை ஏற்​றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்​ய​காந்த்,வழக்கை இன்று விசா​ரணைக்கு
பட்​டியலிடு​வ​தாக உறு​தி​யளித்​தார்.

தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்பட ரூ.35 கோடி குதிரைபேரம் நடந்​த​தாக கிருஷ்ணகிரி மாவட்​டம்,ஊத்​தங்கரை தொகுதி தவெக சமஉ இளை​ய​ராஜா புகார் அளித்​திருந்​தார்.இந்தவழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல்துறையினர் 14 பேரை கைது செய்​தனர்.இந்தவழக்​கில் செந்​தில்பாலாஜி,அவரது தம்பி அசோக்குமாரும்
சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​பிணை பெற்​றனர்.எனினும்,இரு​வரும் திரு​வல்​லிக்​கேணி காவல்நிலை​யத்​தில் தின​மும் காலை 10:30 மணி, மாலை 5:30 மணிக்கு நேரில் சென்று கையெழுத்​திட வேண்​டும் என்று நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.அதன்​படி,செந்​தில் பாலாஜி,அசோக்​கு​மார் ஆகிய இரு​வரும் காவல்நிலை​யத்​தில் கையெழுத்​திட்டு வந்​தனர்.செந்​தில்பாலாஜி நேற்று முன்​தினம் மாலை கூட திரு​வல்​லிக்​கேணி காவல்நிலை​யம் சென்று கையெழுத்​திட்​டார்.

டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் சென்னை உயர்நீதி​மன்​றம் முன்​பிணை மனுவை தள்​ளு​படி செய்த பிறகு நேற்று காலை திரு​வல்​லிக்​கேணி காவல்நிலை​யத்​தில் செந்​தில் பாலாஜி கையெழுத்திட​வில்​லை.டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​படு​வதைத் தவிர்க்க தலைமறை​வான​தாகச் சொல்லப்படுகிறது.

திரு​வல்​லிக்​கேணி காவல்நிலை​யத்​தில் கையெழுத்​திட வந்த அவரது தம்பி அசோக்​கு​மார்,சகோ​தரர் செந்​தில்பாலாஜிக்கு உடல்​நிலை சரியில்​லை.அத​னால்​ மருத்​துவமனை சென்​றுள்​ளார்​ என்​று தெரிவித்​தார்​.எந்​த
மருத்​துவமனை என்​ற விவரத்​தை தெரிவிக்​கவில்​லை.

இந்​நிலை​யில், செந்​தில் பாலாஜி மேல்​முறை​யீடு மனுவை விசா​ரிக்​கும்போது, தங்​களது தரப்பு கருத்​தைக்
கேட்​காமல் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​கக் கூடாது என்று கோரி உச்சநீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு இலஞ்ச
ஒழிப்​புத்துறை சார்​பில் வழக்​கறிஞர் விருந்தா பண்​டாரி கேவியட் மனு தாக்​கல் செய்​துள்​ளார்​.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் அத்தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Leave a Response