
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து ஓசூரில்
இந்திய பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடைபயணம்
நடைபெற்றது. அதற்கு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செய்லாளர் மு.வீரபாண்டியன்
கூறியதாவது….
காவிரி நடுவர் மன்றத்தின் 2007 ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பையும்,2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக முயற்சிப்பதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்.
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தோ அல்லது கூட்டாகவோ போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.அரசியல் சூழல் உருவானால் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடும்.அத்தகைய சூழல் ஏற்பட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்கமாட்டோம்.
தமிழ்நாட்டில் குதிரை பேரம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.வட இந்திய மாநிலங்களில் இருந்து படிப்படியாக தமிழகத்துக்கும் பரவியுள்ளது.இது நல்லதல்ல.எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் நாங்கள் எதிர்ப்போம்.
தமிழக அமைச்சரவையில் இடம்பெறும்சூழல் உருவாகி வருகிறது.ஓசூர் மண்ணிலிருந்தும் அமைச்சர்
உருவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
