ஜெகதீப் தன்கருக்கு வீட்டுக்காவல் – திருமாவளவன் அதிர்ச்சி

விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன், தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று
கூறிய​தாவது….

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை பாஜக அரசு திணித்​துள்​ளது. ஏற்​கெனவே குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த தன்​கரை பதவி வில​க​வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​துள்​ளனர். குடியரசு துணைத்
தலை​வருக்கே இந்த நிலை என்​றால், குடிமக்​களுக்கு என்ன நிலை என்​பதை எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.

தமிழர் ஒரு​வரை குடியரசு துணைத் தலை​வ​ராக்​கு​வோம் என்று சிலர் குரல் எழுப்ப ஆரம்​பித்​துள்​ளனர். இது
தமிழ்​நாட்​டுக்​கான துணைத் தலை​வர் பதவி அல்ல. இந்​தி​யா​வுக்​கான துணைத் தலை​வர் பதவி. எனவே, இதில் தமிழர் என்​கிற அடை​யாளத்தை முன்னிறுத்​து​வ​தில் எந்​தப் பலனும் கிடை​யாது. பாஜகவா அல்​லது பாஜக அல்​லாத ஜனநாயக சக்​தி​களா? என்​று​தான் அணுக வேண்​டும்.

அரசி​யலமைப்புc சட்​டத்தைp பாது​காக்​கக் கூடிய ஒரு​வரை குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்ய
வேண்​டும். எனவே, சுதர்சன் ரெட்​டிக்கு ஆதர​வளிக்கk கோரி விசிக சார்​பில் அனைத்து நாடாளு​மன்ற
உறுப்​பினர்​களுக்​கும் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்​பி​யுள்​ளேன்.

சென்னை தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தில் தொடக்​கத்​தில் இருந்து அவர்​களுக்கு ஆதர​வாக இருக்​கிறோம். முதலமைச்சரைச் சந்​தித்​து, தனி​யார் வசம் ஒப்​படைக்கக் கூடாது என்று வலி​யுறுத்​தி​யுள்​ளோம். அந்தத் தொழிலையே ஒரு குறிப்​பிட்ட சமூகத்​தினருக்​காக நிரந்​தரப்​படுத்தி விடக்​கூ​டாது என்​ப​தற்​காகத்​தான் மாற்​றுக் கருத்தை முன்​வைத்​தோம். அதைப் புரிந்​து​கொள்​ளாமல், தூய்மைப் பணி​யாளர்​களுக்கு எதி​ரான கருத்து என்று
கூறு​வது அதிர்ச்​சி​யாக உள்​ளது.

குறிப்​பிட்ட சமூகத்​தின் தொழிலாக தூய்​மைப் பணியை நிரந்​தரப்​படுத்தி விடக்​கூ​டாது என்​ப​தில் அரசு கவன​மாக இருக்க வேண்​டும். 31 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அமைச்​சர்​கள் பதவியை பறிக்​கும் புதியசட்​டம் மிக​வும் கொடிய சட்​டம்.

இவ்​வாறு திரு​மாவளவன் கூறி​னார்​.

Leave a Response