முழுக்க இந்தியில் பேசிய பிரதமர் அதை மட்டும் ஆங்கிலத்தில் பேசியது ஏன்?

பீகார் மாநிலம் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.சில திட்டங்களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது….

கிராமங்​கள் வளர்ச்சி அடைந்​தால்​தான் பாரதம் வளர்ச்சி அடை​யும் என்று மகாத்மா காந்தி கூறி​னார். இதை கருத்தில் கொண்டு கிராமங்​களின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

நாடு முழு​வதும் 5.5 இலட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் சேவை மையங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. இந்த மையங்​கள் மூலம் அரசின் அனைத்து சேவை​களும் வழங்​கப்​படு​கிறது. கடந்த 10 ஆண்​டு​களில் பஞ்​சா​யத்​துகளின் வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு சார்​பில் ரூ.2 இலட்​சம் கோடி வழங்​கப்​பட்​டிருக்​கிறது.

நாடு முழு​வதும் ரயில், சாலை, விமானப் போக்​கு​வரத்து வசதி விரிவுபடுத்​தப்​பட்டு வரு​கிறது. இன்​றைய தினம் பாட்​னா, ஜெய்​நகர் இடையே நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் இலட்​சக்​கணக்​கான மக்​கள் பயன் பெறு​வார்​கள்.

கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி சுற்​றுலாப் பயணி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்டு உள்​ளனர். இந்தத் தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்​கிறது. தாக்​குதலில் காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

பஹல்​காம் தாக்​குதலில் மகனை, சகோ​தரனை, வாழ்க்​கைத் துணையை இழந்து பலர் தவிக்​கின்​றனர். கன்​னடம், மராத்​தி, ஒடி​சா, குஜ​ராத்​தி, வங்க மொழி என பல்​வேறு மொழிகளைப் பேசும் சுற்​றுலாப் பயணி​கள் உயிரிழந்துள்ளனர். கார்​கில் முதல் கன்​னி​யாகுமரி வரை மக்​கள் துயரத்​தில் மூழ்கி உள்​ளனர். இந்​தி​யா​வின் ஆன்மா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது.

தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாகத் தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்குத் தண்​டனை வழங்​கப்​படும். தீவிர​வாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களைத் தேடிக்கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு தீவிர​வா​தி​யும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களைத் துரத்​து​வோம். தீவிர​வா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்​தை​யும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்டப்படும்.

மனி​தாபி​மானத்​தின் மீது நம்​பிக்கை கொண்​ட​வர்​கள் இந்​தி​யா​வுக்கு துணை நிற்​பார்​கள் என்று உறு​தி​யாக நம்புகிறேன். பஹல்​காம் தாக்​குதலுக்குக் கண்​டனம் தெரி​வித்த பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் மக்களுக்கும் நன்​றி தெரி​வித்து கொள்​கிறேன்.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யில் பேசி​னார். ஆனால் பஹல்​காம் தீவிர​வாதத் தாக்​குதல் குறித்துப் பேசும்​போது மட்டும் அவர் ஆங்​கிலத்​தில் உரை​யாற்​றி​னார். தாக்​குதலில் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் மற்​றும் உலக நாடு​கள் புரிந்து கொள்​ளும் வகை​யில் ஆங்​கிலத்​தில் பேசி​ய​தாக ஒன்றிய அரசு வட்​டாரங்​கள்
தெரி​வித்​துள்​ளன.

இந்நிகழ்வு ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு மிக மிகத் தவறானது என்பதை உணர்த்துகிற வகையில் அமைந்துள்ளது.

Leave a Response