விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 1 முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டணச் சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது. விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.