10 மணி நிலவரம் – வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

10 மணி நிலவரப்படி வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4752 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்

Leave a Response