அரவிந்த் சாமியாக மாறுகிறார் எஸ்.ஜே.சூர்யா..!


சில மாதங்களுக்கு முன் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. கூடுவிட்டு கூடு பாயும் கதையை வைத்து இந்தப்படத்தை சுவாரஸ்யமாக எடுத்திருந்தனர். தமிழில் மதிப்பான வெற்றிபெற்ற இந்தப் படத்தை, தற்போது தெலுங்கில் ரீமேக் பண்ணவுள்ளனர். தெலுங்குக்காக, கதையின் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்

ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார். அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்க, அரவிந்த்சாமியையே அழைத்தனர்.. ஆனால் அவர் தற்போது தமிழில் பிசியாக இருப்பதால், அவர் கேரக்டரில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது..

Leave a Response