ஜனநாயகன் படத்தில் முஸ்லிம் வெறுப்பு பரப்புரை – காவல்துறையில் புகார்

நடிகர் விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ஜன​நாயகன்.எச்​.​வினோத் இயக்​கத்​தில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

சனவரி மாதம் பொங்​கல் பண்​டிகைக்கு இப்​படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், தணிக்​கைச் சிக்கல் காரண​மாக இது​வரை வெளி​யாக​வில்​லை. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, படத்தை மறு​தணிக்​கைக் குழு கடந்த மாதம் பார்த்​தது. படத்​துக்கு விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்தச் சூழலில்,ஜன​நாயகன் படத்​தில் இடம்​பெற்​றுள்ள சுமார் 5 நிமிட காட்சிகள் இணை​யத்​தில் 9 ஆம் தேதி
வெளி​யானது. பல்​வேறு வலை​தளங்​களி​லும் இது வேக​மாக பகிரப்​பட்​டது. இதனால், படத்தயாரிப்பு நிறு​வன​மும், படக்குழு​வினரும் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

இந்த நிலை​யில்,ஜன​நாயகன் முழுப்​பட​மும் நேற்று அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாக மர்ம நபர்​களால் வெளி​யிடப்​பட்​டது. இணை​யம் மற்​றும் வலை​தளங்​களில் இது​வும் வேக​மாகப் பகிரப்​பட்​டது.

முழுப்படமும் இணை​யத்​தில் வெளி​யானது திரைப்படதுறையில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
முழுப்படத்தையும் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்கம்,தயாரிப்பாளர்கள் சங்கம்,தொழிலாளர்கள் சங்கம், விஷால்,ரஜினிகாந்த்,சூர்​யா,சிரஞ்​சீ​வி,சிவ​கார்த்​தி​கேயன்,விஜய் ஆண்​டனி,ஜீவா,ஜி.​வி.பிர​காஷ் குமார் உட்பட திரை​யுல​கினர் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இந்நிலையில் அப்படத்தின் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.

நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி தமிழ்நாடு தலைவர்
அப்துல்ரகீம், ஜனநாயகன் படம் குறித்து புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது….

ஜனநாயகன் திரைப்பட முன்னோட்டம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த முன்னோட்டக் காட்சியில் வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பதுபோல் காட்சி வருகிறது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்து தேர்தலை நிறுத்தவோ அல்லது வன்முறை நடத்தவோ ஜோசப் விஜய்யும், இப்படத்தினை இயக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது. ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும் இயக்குநர் எச்.வினோத், கே.வி.என் புரொடக்‌ஷன் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response