புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்….
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி-110 இன் கீழ் முதலமைச்சர், ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். அதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளும் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு
* பேச்சுப் போட்டி
தலைப்புகள்:
தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே, பாரடா உனது மானிடப் பரப்பை, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ஒரு கதை சொல்லட்டுமா குறித்து பதிவிட வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).
* கவிதைப் போட்டி
தலைப்புகள்:
தமிழே! தமிழர் உயிரே, வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு, இனிமைத் தமிழ்மொழி எமது, தமிழும் நானும் என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 பக்க அளவில் கவிதைகள் அமைதல் வேண்டும். கவிதைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும்
* கட்டுரைப் போட்டி
தலைப்புகள்:
புதியதோர் உலகு செய்வோம், துறைதோறும் தொண்டு செய்வாய், அறிவை விரிவு செய், மாபெரும் தமிழ்க் கனவு என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும்
* ஓவியப் போட்டி
பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஓவியங்களை கோப்பாக அனுப்ப வேண்டும்
* ஒப்பித்தல் போட்டி
தலைப்பு:
பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து 1 (கரும்பு தந்த தீஞ்சாறே), 3 (ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்) பாடல்களைப் பரிந்துரைக்கலாம். குறித்து பதிவிட வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).
போட்டியில் கலந்துகொள்பவர்கள் tndiprmhtamilvellum@gmail.com, tndiprmhtamilvellum@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக படைப்புகளை மே31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.