மோடிக்கு மனசாட்சியே இல்லையா? – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது.

நேற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. முந்தைய நாள் விலையில் இருந்து பெட்ரோலுக்கு 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்துள்ளன. அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டர் 103.92க்கும் டீசல் 99.92 க்கும் விற்பனையாகிறது.

இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 104.22. டீசல் விலை ரூ 100/25. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இதன்மூலம் சென்னையில் முதன்முதலாக ரூ 100 ஐக் கடந்திருக்கிறது டீசல் விலை.

மனசாட்சியே இல்லாமல் இப்படி நாள்தோறும் விலையை உயர்த்திக்கொண்டேயிருக்கிறார் மோடி.எனக்கென்ன என்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.மற்ற மாநில அரசுகளும் இதுபற்றி எதிர்வினை ஆற்றாமல் அமைதி காக்கின்றன.

மக்கள்தாம் பெரும் துன்பம் அனுபவித்து வருகின்றனர்.

Leave a Response