
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மேற்கு மண்டல 27-வது தேசிய தடகள போட்டி கடந்த 2 நாட்கள் நடந்தது.
இந்தப் போட்டியில் மராட்டிய மாநிலம் சார்பில் தமிழ் மாணவி ரேவதி வெங்கடாச்சலம் கலந்து கொண்டார். இவர் 400 மீட்டர் ஓட்டத்தில், பந்தய தூரத்தை 1 நிமிடம் 0.38 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோல் 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 25.73 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் மராட்டிய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
இந்திய அளவில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் மாணவி ரேவதி வெங்கடாச்சலம் பால்கர் மாவட்டம், வசாய் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
