பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த எதிர்ப்பை மீறி, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை தாக்கல் செய்தார். 9 மணி நேர நீண்ட விவாதத்துக்குப்பின், மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக 80 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் அமைப்புகள் இணைந்து இன்று 11 மணி நேரம் முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி, இன்று காலை 5 மணிக்கு முழு அடைப்புப் போராட்டம் துவங்கியது.

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியினா் திருவிழா நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழுஅடைப்பின்போது பல இடங்களில் தீவைப்பு நிகழ்வுகள் நடந்துவருவதாக முதற்கட்டத் தகவல்கள் வருகின்றன.

Leave a Response