வங்கி ஊழலில் அருண்ஜெட்லிக்கு தொடர்பு – ராகுல் திடுக் குற்றச்சாட்டு

இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய வங்கி ஊழல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்திருக்கிறது.

ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இவ்வளவு பெரிய நிதி மோசடி குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி எதுவுமே சொல்லவில்லை. அதற்குக் காரணம் என்ன? என்பதை
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மீது வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தனது பதிவில், “வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட சில குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார். இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதி மந்திரி மவுனம் காத்து வருகிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது” என்றார்.

“இதுபோன்ற சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில், இவருடைய (அருண்ஜெட்லி) மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Response