பிக்பாஸ் குழு காயத்ரியைப் பாதுகாப்பது எதனால் தெரியுமா?

ஓவியா சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைந்து விட்டதாகவும், இதனால் தான் ஓவியாவை திரும்ப அழைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், காயத்ரி வெளியேற்றப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்டு, கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினால் வெளியேற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவர் எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார். இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை வெளியேற்றப்படுவதிலிருந்து காப்பாற்றிவிட்டார்.

காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக ஏற்கெனவே இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளதாக பலரும் கொந்தளித்துள்ளனர்.

ஓவியாவும் இல்லாத நிலையில் சர்ச்சைக்குரிய காயத்ரியையும் விட்டுவிட வேண்டாம் என பிக்பாஸ் குழுவினர் நினைப்பதே அதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response