இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – போராட்டங்களை மதிக்காத அரசுகள்

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை இலிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு இலிட்டர் பெட்ரோல் ரூ.99.49-க்கும், ஒரு இலிட்டர் டீசல் ரூ.93.46-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை இலிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 99.80 ரூபாய்க்கு, டீசல் விலை இலிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் காங்கிரசு மற்றும் இடத்சாரிக் கட்சிகள் இந்த அநியாய விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை முற்றாக அலட்சியம் செய்துவிட்டு நாள்தோறும் விலையை ஏற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்.

Leave a Response