
ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனி எழுதியுள்ள குறிப்படத்தக்க பதிவு….
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் கோடு காட்டுகின்றன.
நுட்பமாக அவதானித்தால் ஒரு உண்மை புரியும். திமுகவின் வாக்கு வங்கியை சிதைத்தது நாம் தமிழர் கட்சிதான்..
அதுவே தினகரனுக்கான மேலதிக
வாக்குகளாக மாறியது.
இதன் வழி நாம் தமிழர் சாதாரண சீட்டு என்ற நிலையிலிருந்து ஒரு துருப்பு சீட்டு என்றளவில் முன்னேறியிருக்கிறது.
எதிர்காலத்தில் வகுக்கும் தந்திரங்கள்
வழியாக தமக்கான ஒரு கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கும் நிலைக்குள் நாம் தமிழர் கட்சி வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


