கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்….
கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில் 500 சதுர கி.மீ பரப்பளவிற்கு பல்லுயிர்ப் பாதுகாப்புப் பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே ஒரே தாவர வகை கடல் பாலூட்டியான கடல் பசுக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் கடல் பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதன் மூலம் கடல் பசுக்களைப் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன,