‘கூட்டத்தில் ஒருத்தன்’ கார்த்தி தானாம் ; இயக்குனர் புது தகவல்..!


தெகிடி படத்தில் ஓரளவு வரவேற்பு பெற்ற அசோக் செல்வன் தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானவேல் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. சிவகுமார் குடும்பத்தில் ஒருத்தராகவே கருதப்படும் இவர் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதையை உருவாக்குவதற்கு காரணமே கார்த்திதான் என்று கூறியுள்ளார்…

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழா மேடையில் அதுபற்றி ஞானவேல் சொல்லும்போது, “நிஜமாக சொன்னால் இந்த கதை உருவாக காரணமாக இருந்தவர் நடிகர் கார்த்தி தான். நிஜத்தில் அவர் தான் இப்படத்தின் கதாநாயகன்! அவர் வீட்டுக்கு சென்று ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது, அண்ணன் மூத்தவராக பிறந்ததால் வீட்டில் அவர் எல்லாருக்கும் செல்லம். அதைப் போல தான் கடைசியாக பிறந்த சகோதரிக்கும்.. ஆனால் நடுவில் பிறந்த எனக்கு தான் ஒன்றும் இல்லை! அவர் இப்படி சொன்ன அந்த வார்த்தையிலிருந்து உதித்த கருவை வைத்து உருவாக்கியது தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை என்கிறார்.. அப்பா கூட்டத்தில் ஒருத்தன் கார்த்தி தானே..?

Leave a Response