எடப்பாடி நிர்வாகி வீட்டில் துக்கம் – சசிகலா இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் திரைமறைவில் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வீட்டில் நடந்துள்ள ஒரு துக்க நிகழ்வுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்…..

சேலம் புறநகர் மாவட்டக் கழக மீனவர் அணி செயலாளர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷ் அவர்களின் மாமியார் திருமதி.கலைச்செல்வி ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது மாமியாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷ் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response