
மே 11 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பாமக சார்பில சித்திரை முழு நிலவு இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.
அதற்குப் பிறகும் மருத்துவர் இராமதாசு அவர் மகன் அன்புமணி ஆகியோருக்கிடையே மோதல் நீடித்து வந்தது.
மருத்துவர் இராமதாசு, கட்சி நிர்வாகிகளை அழைத்துப்பேசிக் கொண்டிருந்தார்.
அன்புமணியோ எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொல்லாமல் இருந்தார்.
இந் நிலையில் நேற்று (மே 24) தரும்புரியில் கட்சியின் மூத்த உறுப்பினர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அன்புமணி,
தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால், வன்னியர் சமூகம் முன்னேறவேண்டும். அதற்குத்தான் பாமக கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதற்காக டாக்டர் இராமதாஸ் உடன் பாடுபட்டவர் மறைந்த கனல் ராமலிங்கம். வெற்றிகரமாக நடந்து முடிந்த வன்னியர் சங்க மாநாடு பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வயிற்றெரிச்சலில் குற்றம்சாட்டி பேசுகின்றனர். எவ்வளவோ தடைகளை மீறி மாநாடு நடத்தப்பட்டது
கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை, இதே நினைவுதான். மருத்துவர் அய்யா சொல்வதை செய்து முடித்தவன் இனியும் அவர் சொல்வதைச் செய்து முடிப்பேன். அது எனது கடமை.
நமது சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும். எங்களுக்கு நியாயம் வேண்டும், சமூக நீதிவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும். அதற்கு இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், இதுவரை அய்யா சொன்னதை செய்தேன், இனியும் அவர் சொல்வதையே செய்வேன் என்று பேசியிருப்பதை வைத்து அன்புமணி இறங்கி வந்துவிட்டார் அதனால் பாமகவில் சுமுக நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள்.


