இவ்வாண்டு பொங்கலுக்கு 5 நாள் அரசு விடுமுறை – அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் தமிழர்திருநாளாம் பொங்கல் விடுமுறை சனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் வருகிறது.இவற்றில் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால் 17 ஆம் தேதி வேலைநாளாக இருந்தது.

இந்நிலையில், இன்று 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

17 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (சனவரி 14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response