அதிமுகவில் அடிதடி – சசிகலா அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய அதிமுக தலைமை அலுவலகம் வந்தவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது.
இனி என்னை போன்றவர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும்.
தொண்டர்களின் நலனின் அக்கறை செலுத்தும்போதுதான், அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும்.

ஒரு இயக்கத்துக்கு தேவை,
கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர,
தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல

ஒன்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர வேண்டும்.

இன்று தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Leave a Response