முடிவுக்கு வந்தது இழுபறி – அதிமுக கூட்டணியில் பாசகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழகத்தில் இரண்டு பெரும் கூட்டணிகளாக இருப்பது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி. பிப்ரவரி 27 ஆம் தேதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) மாலை அதிமுக தலைமையிலான அணியில் பாசக 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாசக போட்டியிடுவதெனவும் இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால் அதிமுக கூட்டணியில் இருந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Response