இந்திய அரசின் நிலம் கையகப்படுத்துல் சட்டத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, கடந்த 23.05.2015 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழக உழவர் முன்னணியின் தமிழகப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 09.06.2015 தமிழகத்தின் பல பகுதிகளில், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் திரு. தெ. காசிநாதன் தலைமையேற்றார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திரு. கலந்தர், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நிறைவுரையாற்றினார்.
சிதம்பரம்
கடலூர் மாவட்டம் – சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணித் தமிழகத் தலைவர் திரு. சி. ஆறுமுகம் தலைமையேற்றார். த.உ.மு. கடலூர் மாவட்டத் தலைவர் திரு. அ..கோ. சிவராமன், துணைப் பொதுச் செயாளர் திரு. தங்க கென்னடி, குமராட்சி ஒன்றியச் செயலாளர் பொறியளர் செயபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றினார்.
இராயக்கோட்டை
கிருட்டிணகிரி மாவட்டம் – இராயக்கோட்டை – கிருட்டிணகிரி சாலை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு. தூருவாசன் தலைமையேற்றார். த.உ.மு. செயற்குழு உறுப்பினர் தோழர் மு. வேலாயுதம் நிகழ்வை நெறிப்படுத்தினார். தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் திரு. கோ. மாரிமுத்து, கோனேரி அக்ரகாரம் த.உ.மு. கிளைச் செயலாளர் திரு. முனியப்பன், த.உ.மு. செயற்குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணியன், தமிழ்த் தேசியப் பேரியக்கம் தர்மபுரி தோழர் முருகேசன், கருக்கம்பட்டி கிளைச் செயலாளர் திரு. விருமாண்டி, தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தலைவர் திரு. முரளி உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.
பெண்ணாடம்
கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில், பழைய பேருந்து நிலையம் (ஆயுள் காப்பீட்டு நிறுவனம்) அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. மு.இராமகிருட்டிணன் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு. க.முருகன், திருவள்ளுவர் தமிழர் மன்ற முருகன்குடி செயலாளர் திரு. தி.ஞானபிரகாசம், தமிழக உழவர் முன்னணி பொருளாளர் திரு. அரா.கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, மனித நேயப் பேரவை திரு. பெ.ச.பஞ்சநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில், மகளிர் ஆயத்தைச் சேர்ந்த பெண்களும், திருவள்ளுவர் தமிழர் மன்றம் திரு. அ.பெ. இராதாகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களும், கீழ்நெம்மேலி தமிழக உழவர் முன்னணி கிளைத் தலைவர் திரு. மு.சீனிவாசன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். நிறைவில், தோழர் மு.பொன்மணிகண்டன் நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் ச. கோவிந்தசாமி தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் இரா. தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் குரும்பூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி தலைமையேற்றார். குருகாட்டுர் பஞ்சாயத்துத் தலைவர் திரு. மு. ஜேம்ஸ், நீர்நிலை பகிர்வோர் சங்கத் தலைவர் திரு. ராஜபாண்டியன், அம்மன்புரம் குளம் தலைவர் திரு. துரை பாண்டியன், த.உ.மு. செயற்குழு உறுப்பினர் திரு. விஜய நாராயண பெருமாள், ஒன்றியத் தலைவர் திரு. பெ.மகாராஜன், குரும்புர் நகரச் செயலாளர் திரு. தியாகராஜன், புரையூர் செயலாளர் திரு. ப. சிவக்குமார், மணத்தி செயலாளர் திரு. சுரேசு, திருச்செந்தூர் செயலாளர் திரு. விசுவநாதத்தமிழன் புரையூர் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ரமேசு, நீள்புரம் கானக்குளத் தலைவர் திரு. கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டங்களின் போது, “டாட்டா பிர்லா அம்பானிக்காக, வெள்கைக்கார முதலாளிக்காக உழவர் நிலத்தைப் பறிக்காதே!”, “தமிழர் தாயகம் பறிக்காதே! நிலப்பறிப்பு சட்டத்தை கையகப்படுத்தல் சட்டத்தை திரும்பப் பெறு திரும்பப் பெறு” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.