இப்படியும் சுதந்திரதின வாழ்த்து சொல்லலாம் – மாற்றி யோசித்த சீமான்


நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் கூறியிருப்பதாவது,

சுதந்திரம் இல்லாத நாடு பெரும் காடு!
– நாமக்கல் கவிஞர்

சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை!
– புரட்சியாளர் பகத்சிங்

சுதந்திரம் எனது பிறப்புரிமை!
– பாலகங்காதர திலகர்

மிருகங்களைப் போல் நடந்துகொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது!
– அண்ணல் காந்தியடிகள்

பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு உயர்வடைய முடியாது!
– ஜவகர்லால் நேரு

அரசியல் வாழ்க்கையிலும் சமுக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம்; ஆனால் ஆசைகளுக்கும் கோவத்துக்கும் அவன் அடிமையாக இருந்தால் சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது!
– சுவாமி விவேகானந்தர்

எவன் ஒருவன் யாரையும் சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ? அவனே சுதந்திரம் பெற்ற மனிதன்!
– புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்

விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்!
பெற்ற விடுதலையைப் பேணிக் காப்போம்!
பெருமை சேர்ப்போம்!

இவ்வாறு அந்த வாழ்த்து குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response