சில மாதங்களுக்கு முன் வெளியான மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தனது இரண்டாவது படத்தில் கார்த்தியை இயக்குவதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் லோகேஷ்.
‘மாநகரம்’ படத்தை தயாரித்த பொடென்ஷியல் சினிமா நிறுவனத்திற்கே அவர் அடுத்த படமும் இயக்க இருப்பதாக தகவல் உறுதியாகியுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தியின் நட்பு நிறுவனம் என்பதால் லோகேஷ் கார்த்தியின் படத்தை இயக்குவது உறுதி என்றே தெரிகிறது.
தற்போது ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ படத்தில் நடித்து முடித்துவிட்ட கார்த்தி, அடுத்ததாக விஷாலுடன் இணைந்து ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.